tamilnadu

img

ஜெயக்குமாருக்கு மைக் மேனியா

சென்னை, மார்ச் 28- ஜெயக்குமாருக்கு மைக் மேனியா உள்ள தாக அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீரா சாமியை ஆதரித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் கவுதம புரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடி யிருப்பு வளாகத்தில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

அப்போது திமுக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் தொடர்பான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டனர். இதில் திமுக பகுதிச் செயலாளர் வ.முரளிதரன், அயூப்கான், சுரேஷ் (சிபி எம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தி யாளர்களிடம் கூறுகையில், தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் ஜெயக்குமார் அவதூறுகளை அள்ளி வீசுகிறார். ஜெயக்குமாருக்கு தினசரி மைக் முன் பேச வேண்டும் என நினைக்கும் மைக் மேனியா உள்ளது என்று கூறினார். மேலும் தற்போதும் தான் அமைச்சராக இருப்பதாக நினைத்துக்கொண்டு ஜெயக்குமார் அதிகார தோரணையில் அதிகாரிகளை மிரட்டினார். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு திமுக தொடர்ந்து பணிகளை மேற்கொள்ளும். இது போன்ற சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என்றும், திமுக விதிமீறல்களில் எங்கும் ஈடுபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

;