tamilnadu

img

உலக பாரா தடகள போட்டியில் தமிழக வீரர் வெண்கலம் வென்றார்!

துபாயில் நடைபெறும் உலக பாரா தடகள போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்றார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், உயரம் தாண்டுதல் ஆடவர் பிரிவில்,  இந்தியாவின் சரத்குமார் வெள்ளிப்பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கத்தையும் வென்றனர். சரத்குமார் 1.83 மீட்டர்   உயரம் தாண்டி, வெள்ளி பதக்கத்தை தட்டிச்சென்றார். அதேபோல், 1.80 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கம் வென்றார். இந்த போட்டியில், பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டித்தொடரில் கலந்து கொள்ள இரு வீரர்களும் தகுதி பெற்றனர். 
 

;