tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை- கல்லூரி மாணவன் கைது

பென்னாகரம், ஜூன் 15- 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நலப்பரம்பட் டியை  சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் மாதேஸ்வரன்(19). இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங் கால் வீட்டில் இருந்த இவர் கடந்த ஜூன் 13ஆம் தேதி மாலை  5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதையறிந்த குழந்தையின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை சிறுமிக்கு பாலியல்  தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன் மாதேஸ்வரனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

;