tamilnadu

img

பரணி பார்க் கல்விக் குழுமத்தில் விழிப்புணர்வு

கரூர், ஏப்.10 -பரணி பார்க் கல்விக் குழுமத்தில் தேர்தல் நாளன்று நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதிமோகனரெங்கன், முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சூர்யபிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிப்பது குறித்துஉரையாற்றினார். மேலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்திய மாணவர்களாகிய நாங்கள், எந்தவொரு சாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க நாங்கள் முழுமையாக முயற்சி செய்வோம் என்று மாணவ-மாணவிகள், பயிற்சி ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மாணவ, மாணவிகள் ‘100ரூ ஏடிவந 18.04.19’ என்ற வாசகம் போல் அணிவகுத்து நின்றனர்.

;