tamilnadu

உறுப்பினர் பெயர் பட்டியலில் சேர்க்க தரைக்கடை வியாபாரிகளுக்கு அழைப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.23-திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறுபகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தெருவோர வியாபாரிகளின்வாழ்வாதாரத்தை மேம்படுத்திட(தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள்) நகரவிற்பனைக்குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு 13 உறுப்பினர்கள் கொண்டதாகும். இக்குழுவிற்கு வியாபாரிகளின் பிரதிநிதிகளாக 6 உறுப்பினர்கள் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதனிடையில் மேற்கண்ட வியாபாரிகள்சார்பாக உள்ள பல்வேறு சங்கங்கள் மூலம்தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணைகளில் பிறப்பிக்கப்படுள்ள உத்தரவுகள் அடிப்படையில் தற்போது உள்ள வியாபாரிகள் 3458 உறுப்பினர்கள் கொண்ட பட்டியல்திருச்சி மாநகராட்சியின் நான்கு கோட்ட அலுவலகங்களிலும் அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இப்பட்டியலில் விடுபட்டுள்ள வியாபாரிகள் தங்களது பெயர்களை உறுப்பினர் பட்டியலில் இணைத்துக் கொள்ள அவர்களது முழு விவரங்களுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் ஏற்றுக் கொள்ளக் கூடியஆதாரத்தினை 2.05.2019 அன்றோ அதற்குமுன்பாகவோ அரசாணையில் சொல்லப் பட்டுள்ள படிவம் பூர்த்தி செய்து மேற்கண்ட ஆதாரங்களுடன் அந்தந்த மாநகராட்சி கோட்ட உதவி ஆணையர்களிடம் சமர்ப் பிக்க திருச்சி மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

;