tamilnadu

img

கால்நடை மருத்துவ முகாம்

சீர்காழி, ஏப்.1-


நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில், புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரிமற்றும் சாமியம் கால்நடை மருத்துவமனை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரும், உதவிப் பேராசிரியருமான சசிக்குமார் தலைமை ஏற்று முகாமைத் துவக்கி வைத்தார்.ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் சத்யமூர்த்தி வரவேற்றார். கால்நடை மருத்துவர் பகத்சிங் தலைமையில் மருத்துவக் குழுவினர், கால்நடைகளுக்கு கோமாரி நோய்தடுப்பூசி மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டகால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. 

;