tamilnadu

img

சாத்தான்குளம் கொலை வழக்கு போலீசாருக்கு விரைந்து தண்டனை வழங்கக்கோரி வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி. ஜூலை 5- சாத்தான்குளம் வியாபாரி கள் படுகொலையில் கைது செய் யப்பட்ட காவலர்களுக்கு தாமதம் செய்யாமல் உடனடியாக தண் டனை வழங்க வேண்டும். காவல் துறையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்னும் பிரிவை தடை செய்ய வேண்டும். புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும். பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக் குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் செங் கோட்டையில் மாவட்டச் செயலா ளர் பி.உச்சிமாகாளி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கோட்டை தாலுகாக்குழு சார்பாக செங்கோட்டை நகரம், கட்டளைகுடியிருப்பு, புளியரை ஆகிய மூன்று பகுதியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை தாலுகாச் செயலா ளர் சி.வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  தென்காசியில் மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை யிலும், கடையம்பகுதிகுழு வெக் களிப்பட்டி கிளை, சங்கரன் கோவில் நகரத்தில் மாவட்டசெயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இராதாபுரம் தாலுகா குழுவில் ஆட்டோவை கயிற்றால் கட்டி இழுக்கும் போரட்டம் தாலு காகுழு தலைவர் முத்துக் குமார் தலைமையில் நடைபெற் றது. இதில் மாவட்ட துணைச்செய லாளர் இசக்கியப்பன் மற்றும் பலர் கலந்து கெண்டனார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிதம்பர நக ரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ். முத்து தலை மை வகித்தார். மாவட்ட நிர்வாகி கள் டேனியல், காஸ்ட்ரோ, பாலா, ஜேம்ஸ் மற்றும் மாநகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.

;