tamilnadu

img

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் முகாம்

மன்னார்குடி, பிப்.26- இந்தியன் வங்கியின் திரு வாரூர் மண்டலம் மற்றும் தமி ழக அரசின் மகளிர் மேம்பா ட்டு நிறுவனம் சார்பில் தமி ழ்நாடு கிராம மற்றும் நகர்ப்புற  வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது.  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், திரு வாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கே.கமல்கிஷோர் இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகளைச் சார்ந்த 46 சுய உதவிக் குழுவினருக்கு இர ண்டு கோடியே இருபத்தி எட்டு லட்சம் ரூபாய் கடன் உதவிகள் வழங்கினார்.  விழாவில்  திருவாரூர் மாவட்ட தமிழக அரசின் கிராம மற்றும் நகர்ப்புற வா ழ்வாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் மற்றும் இந்தியன் வங்கி யின் திருவாரூர் மண்டல மேலாளர் என்.ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்ட னர். முன்னதாக இந்தியன் வங்கியின் திருவாரூர் மண்டல துணை மேலாளர் மு.செல்வ நாயகம் வரவேற்றார். தமிழ்நாடு கிராமப்புற மற்றும்  நகர்புற வாழ்வாதார இயக்க த்தின் உதவி திட்ட அலுவலர்  பி.காமராஜ் நன்றி கூறினார்.

;