tamilnadu

பொன்னமராவதியில் நாளை மின்தடை

பொன்னமராவதி, ஜூலை 13- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, மேலத்தானி யம் பகுதியில் ஜூலை 15 ஆம் தேதி புதன்கிழமை காலை  9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இரு க்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. பொன்னமராவதி ஒன்றியம் கொன்னையூர் மற்றும் மேலத்தானியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு நடைபெறுவதால் பொன்னமராவதி, மேலத்தானியம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ஜூலை 15 (புதன்கிழமை) அன்று மின் விநி யோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி  செயற்பொறியாளர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

;