districts

img

பொன்னமராவதியில் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு

பொன்னமராவதி, ஆக.26 - பொன்னமராவதி பகுதியில் 6 ஊராட்சிகளில் 9 அரசு கட்டிடங்களை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோவனூரில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக அங்காடி கட்டிடம், செம்பூதி ஊராட்சி சிவந்திலிங்கபுரம் மற்றும்  அண்ணா நகரில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாக கட்டிடம், செம்புதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலையரங்க கட்டிடம், நல்லூர் ஊராட்சி ஆத்தங்காட்டில் நிழற்குடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கொப்ப னாப்பட்டி ஊராட்சி கொன்னையூரில் அங்கன்வாடி மைய  கட்டிடம், ஏனாதியில் ரேசன் கடை கட்டிடம், திருக்களம்பூர் ஊராட்சி கருப்புக்குடிப்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் என ரூ.75.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு  கட்டிடங்களை எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். இதில் ஆட்சி யர் கவிதா ராமு, சேர்மன் சுதா அடைக்கலமணி, கூட்டுறவு  சங்கங்களின் இணைப் பதிவாளர் அப்துல் சலீம், ஆர்டிஓ குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;