tamilnadu

img

கொரோனா பரவல்... வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களை தங்கவைக்க குடிசைகள் அமைக்கும் பணி

இம்பால்:
மணிப்பூர் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி நிர்வாகம் 80 குடிசைகளைக் கட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் பூர்வீக மக்களை தங்க வைப்பதற்காக (தனிமைப்படுத்தல் மையங்கள்) இந்தக் குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்பாலுக்கு வடக்கே சுமார் 118 கி.மீ தொலைவில் உள்ள துங்ஜோய் கிராமத்தில் குடிசைகள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த 80 குடிசைகளும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 600 பேர் ஈடுபடுததப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சி நிர்வாகத்தின் உதவி, உள்ளூரில் கிடைத்தபொருட்களுடன் இந்தப் பணி நடை பெற்றுள்ளது.ஒவ்வொரு குடிசையிலும் ஒரு படுக்கை, தனி கழிப்பறை, எரிவாயு வசதி, சார்ஜிங்சாக்கெட் மூலம் மின்சாரம் பெறும் வசதிசெய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிசை யிலும் ஒரு நபர் தங்க வைக்கப்படுவார்.

தேவைப்பட்டால் ஒரு குடும்பம் இரண்டு குடிசைகளை பயன்படுத்தலாம் என்று துங்ஜோய் கிராம ஊராட்சித் தலைவர் எம் எஸ் மார்கஸ் தெரிவித்துள்ளார்.துங்ஜோய் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் மணிப்பூருக்கு வெளியே சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மணிப்பூரில் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றுவிட்டனர். கடந்த 20 தினங்களுக்கும் மேலாக ஒரு நோயாளி கூடமருத்துவமனையில் அனுமதிக்கப்பட வில்லை.

நார்த் ஈஸ்ட் நவ் இணையதளத்திலிருந்து....

;