tamilnadu

img

நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மும்பை, செப்.28- மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் சனியன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப் பல் திட்டம் 17ஏ இன் மூலம் தயாரான முதல் கப்பலாகும். “இந்தியா ஒரு பெரிய நாடு மற்றும் பரந்த கடல் பரப்பைக் கொண்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகள் சுமார் 7500 கிலோ மீட்டர் கடலோரப் பகுதிகளைக் கொண்டது. ஒரு சிறிய இடையூறு கூட நமது நாட்டின் பெரிய அமைதியை சேதப்படுத்தும், இதுதான் இந்திய கடற்படைக்கு நாங்கள் அதிக முக்கி யத்துவம் கொடுப்பதற்கான காரணம்” என்று ராஜ்நாத் சிங் கூறினார். அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் புல னாய்வு திறன் கொண்ட போர் கப்பலை அறிமுகப்படுத்துவது நாட்டில் பெரும் பான்மை பாதுகாப்பு உற்பத்தியை அடை வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முதல்படி யாகும் என்றும் அவர் கூறினார்.

“கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இப்போது இணைந் துள்ளது. இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதே எங்கள் இலக்கு. 2027 ஆம் ஆண்டிற்கான எங்கள் இலக்கு பாது காப்பு உற்பத்தியில் 70 சதவீதம் சுதேசியாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். 2650 டன் எடை கொண்ட நீலகிரி கப்பல் சனியன்று காலை 11:20 மணிக்கு தண்ணீரு டன் முதல் தொடர்பை அடைந்த நிகழ்வு ஆர வாரத்துடன் நடைபெற்றது. இந்த போர்க்கப்பலை நிர்மாணிப்பதில் ஈடு பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டினார் பாதுகாப்பு அமைச்சர். “இந்த அதிநவீன போர்க்கப்பலை வடிவமைத்து நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ள அனை வருக்கும் பெருமை மற்றும் மனநிறைவு அளிக்கும் நாள் இன்று. நீலகிரி போர்க் கப்பல் ஒரு நாள் கடல் அலைகளில் சவாரி செய்து கடல்களை நம்பிக்கையுடன் ஆளு வார். இதுதான் இந்த வலிமையான கப்ப லுக்கான எனது விருப்பமும் பார்வையும்.” என்று அவர் தெரிவித்தார். “நீலகிரி மற்றும் திட்டத்தின் மற்ற 6 கப்பல்கள் மூலம், பெருமையுடன் இந்தியக் கொடி பெருங்கடல்களில் பறக்கும் என்று நான் நம்புகிறேன், இது நாட்டின் தகுதியான பாதுகாப்புத் தூதராக இருப்பதை நிரூ பிக்கிறது, இது எங்கள் கப்பல் கட்டும் வலிமை யைக் காட்டுகிறது, மேலும் இந்தியாவின் அமைதி மற்றும் வலிமை பற்றிய செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

;