tamilnadu

img

தேங்காய், பழம், பூக்களுடன் ஓம் என்று எழுதி முதல் ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார் ராஜ்நாத் சிங்

போர்டோ:
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து முதல்ரபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்டோபர் 8 தேசிய விமானப் படை தினத்தன்று  ஓம் என்று எழுதி  பெற்றுக்கொண்டார் .  பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரமான போர்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் ரபேல் போர் விமானத்தின் டயரின் கீழ் எலுமிச்சை வைத்து, விமானத்தின் மீது தேங்காய், பூ உள்ளிட்ட பொருட்களுடன் ஹிந்தி மொழியில் ஓம் என்று எழுதி ராஜ்நாத் சிங் பூஜை செய்தார். இதைத்தொடர்ந்து, அவர் ரபேல் விமானத்தில் முன்னோட்டப் பயணம் மேற்கொண்டார். பிரான்ஸின் ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக, கடந்த 2016-இல் மத்திய அரசு ஒப்பந்தம்மேற்கொண்டது. இந்த போர் விமானம், ஆற்றல் மிகுந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தாங்கிச்செல்லும் திறன் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும்.

;