பெரம்பலூர் அருகே கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே மலையப்ப நகர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த 8 வயது சிறுவன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.