tamilnadu

img

பொருளாதாரப் பாதிப்பு இந்த ஆண்டோடு முடியாது... தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா கணிப்பு

மும்பை:
இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு 2020-21 நிதியாண்டோடு முடிந்து விடாது என்று பிர்லா குழுமத்தின் தலைவரான குமாரமங்கலம் பிர்லா எச்சரிக்கை செய்துள்ளார்.

நாட்டின் முன்னணி தொழிலதிபர் களில் ஒருவரான குமாரமங்கலம் பிர்லா,சரக்குப் பண்டங்கள் தொடங்கி, டெலிகாம் மற்றும் நிதிசார் சேவைகள் வரைபல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளவர்.இந்நிலையில், தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கொரோனா தொற்றுநோய்ப் பரவல் இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நலிவின் தடங்கள், உலகப் பொருளாதாரத்தில், அடுத்துவரும் ஆண்டுகளிலும் நுகர்வோர் மற்றும் வர்த்தக நம் பிக்கை என்பதன் அடிப்படையில் தாக்கம்செலுத்தும்” என்று கூறியுள்ளார்.நாட்டின் ஜிடிபி நிலவரம் வெறும் 2020-21 ஆண்டு காலக்கட்டத்தோடு மட்டும்சம்பந்தப்பட்டதல்ல; அதையும் தாண்டிய சில ஆண்டுகளுக்கு கடினமான சூழல் களை இந்தியப் பொருளாதாரம் கடக்க வேண்டியிருக்கும்.கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில், நுகர்வோரின் இயல்புகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டு நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.குறிப்பாக, விமானப் போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் துறை பழைய நிலைக்கு திரும்புவதற்கு அதிக காலம்எடுக்கலாம் என்று பிர்லா குறிப்பிட்டுள் ளார்.

;