districts

img

எம்.கணேசமூர்த்தி எம்.பி.,க்கு பிரியாவிடை

ஈரோடு, மார்ச் 28- கடந்த மார்ச் 24ஆம் தேதி தென்னைமரத் திற்கு வைக்கும் சல்பாஸ் உட்கொண்டதன் காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத் துவமனையில் (சுதா மருத்துவமனை) ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கணேச மூர்த்தி சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிக் சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கனேசமூர்த்தி காலமானார். இதையடுத்து அவரது உடல்  சொந்த ஊரான பூந்துறை அருகே உள்ள  குமாரவலசில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. வைகோ, துரை வைகோ, அமைச்சர்கள் சு.முத்துசாமி, கயல்விழி செல் வராஜ், எம்.பி.க்கள் கனிமொழி, ஜோதிமணி,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ்.இளங் கோவன், ஈ.ஆர்.ஈஸ்வரன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண் ணன், ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரி முத்து, ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, எஸ். முத்துசாமி, எஸ்.சுப்ரமணியன், ஏ.எம்.முனு சாமி, மூத்த தோழர் கே.துரைராஜ் உள்ளிட்ட வர்களும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தி னர். இதனைத்தொடர்ந்து அன்னாரது பூத  உடல் அவரது தோட்டத்தில் தகனம் செய்யப் பட்டது.

;