tamilnadu

img

பாஜக-வுக்கு தமிழ்நாட்டின் மீது தீராத வன்மம்! - சு.வெங்கடேசன் எம்.பி

பாஜக-வுக்கு தமிழ்நாட்டின் மீது தீராத வன்மம் உள்ளது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் கோரியிருந்த நிலையில், வெறும் ரூ.275 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. அதேபோல் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.3,498 கோடியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவித்துள்ளது. இந்த நிலையில், பாஜக-வுக்கு தமிழ்நாட்டின் மீது தீராத வன்மம் உள்ளது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல... வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. 
தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு கேட்டதோ ரூ.38,000 கோடி. பாஜக-வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;