districts

img

தலைச்சுமையாக வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்ற அரசு ஊழியர்கள்

நாமக்கல், ஏப்.18- ராசிபுரம் தாலுகா வெண்ணந் தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள  போதமலை பகுதி வாக்குச்சாவ டிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களை அரசு அலுவலர் கள் காவல் துறை பாதுகாப்புடன் தலைச்சுமையாக எடுத்துச் சென் றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி  ஒன்றியத்தில் உள்ளது போத மலை. தரை மட்டத்திலிருந்து 7  கிலோமீட்டர் உயரத்தில் அமைந் துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக் குவரத்து வசதி இல்லை. கரடு  முரடான பாதைகளில் தான் பொது மக்கள் சென்று வந்தனர். தற்போது  ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை  அமைக்கும் பணி நடந்து வரு கிறது. இப்பகுதியிக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமை யாக தான் கொண்டு செல்வது  வழக்கம். தற்போது வெள்ளின்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெட மலையில் ஒரு வாக்குச் சுவடி மைய மும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர்  வாக்குச்சாவடி மையத்தில் 428  ஆண் வாக்காளர்களும் 417 பெண்  வாக்காளர்களும் வாக்களிக்க  உள்ளனர். அதேபோல் கெடமலை யில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் 159 ஆண்களும்  138 பெண்களும் வாக்களிக்க உள்ள னர். நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்க ளிலும் மொத்தம் 1142 வாக்கா ளர்கள் வாக்களிக்க உள்ளனர். வியாழனன்று காலை மேற் கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபு ரம் தேர்தல் அதிகாரி முத்துரா மலிங்கம், வட்டாட்சியர் சரவணன்,  தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகி யோர் காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். மேலும் கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கும் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்தி ரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட் ரோல் யூனிட் உள்ளிட்ட 5 எந்தி ரங்களை மண்டல அலுவலர் விஜ யகுமார், உதவி மண்டல அலுவ லர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள் ளிட்ட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செய லாளர் பரமசிவன் உள்ளிட்ட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொது மக்கள் உதவியுடன் மலைப்பகு திக்கு கொண்டு சென்றனர். அதேபோல் கெடமலை வாக் குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக் குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட 5  எந்திரங்களை மண்டல அலுவலர்  பழனிச்சாமி, உதவி மண்டல அலு வலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய  அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீ சார் உள்பட 10 பேர் பொதுமக்கள் உதவியுடன் நடந்தே கொண்டு செல்லப்பட்டன.

;