districts

img

மாணவி ஸ்ரீமதி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குக மாதர் சங்க விழுப்புரம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

விழுப்புரம்,ஜூலை 20- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் குடும்பத்திற்கு மாநில அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 16 ஆவது மாநாடு செஞ்சியில் மாவட்டத் தலைவர் எஸ்.நீலா தலைமையில் நடை பெற்றது. சங்க கொடியை மூத்த தலைவர் கே.வள்ளி ஏற்றி வைத்தார்.  வட்ட செய லாளர் பி.சங்கீதா வர வேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் வி.உமா மகேஸ்வரி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுதாய் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் சித்ரா வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் எஸ்.அமுதா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் ஜி.கலைசெல்வி, மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அகில இந்திய துணைத் தலைவர் எஸ். சுதாசுந்தர்ராமன் நிறைவுரை யாற்றினார். முன்னதாக, செஞ்சி பேரூராட்சி அலுவ லகம் அருகிலிருந்து பெண்ணிய செயல் பாட்டாளர் பி.பூங்கொடி தலைமையில் புறப் பட்ட ஊர்வலத்தை திமுக மகளிர் அணி  சை தானீபீ மஸ்தான் வாழ்த்தி துவக்கி வைத்தார்.

தீர்மானம்
100 நாள் வேலை தொடர் ந்து வழங்க வேண்டும், பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சாதிய ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட் டம், சின்னசேலம் கனியா மூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பின் உண்மை நிலையை கண்டறிந்து நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாணவியின் குடும் பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி, குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றினர்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக கே.தமிழ்ச்செல்வி, செய லாளராக வி.உமா மகேஸ்வரி, பொருளாளராக பி.இலக்கிய லட்சுமி உட்பட 15 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

;