districts

img

சமூக விரோதிகளின் கூடாரமாக நகராட்சி கடைகள்

விழுப்புரம், செப். 27- விழுப்புரத்தில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் நகராட்சி கடைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் காமராஜர் வீதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 20 கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டன. அந்த கடைகளை நகராட்சி நிர்வா கம் முறையாக பராமரிக்காததால் அந்தக் கட்டங்கள் நாளடை வில் சேதமடைந்தது. இதனால் ஒவ்வொருவராக கடையை காலி செய்யத் தொடங்கினர். கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து கடைகளும் காலி யானது. அதன் பிறகு கடைகளை சீரமைத்து மக்கள் பயன் பாட்டுக்கு விடுவதற்கு நகராட்சி நிர்வாகம் எந்தவித நட வடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த கடைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாகச் செல்லவே பெண்களும், மாணவர்களும் அச்சப் படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கடைகளை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், சமூக விரோதிகளின் நடவடிக்கை களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;