districts

கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆட்சியர் ஆய்வு 

 தஞ்சாவூர், ஜன.7 - கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தஞ்சாவூர்  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை, பெருமாள்கோயில் தனிமைப்படுத் துதல் மையம், பேராவூரணி அரசு மருத்துவமனை, அதிராம்பட் டினம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்து வமனைகளில் போதிய மருத்துவர்கள், படுக்கைகள் உள்ள னவா, ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளனவா, மூன்றாவது  அலை கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அதனை சமாளிக்க  கூடிய கட்டமைப்புகள் உள்ளனவா என ஆய்வு செய்தார்.  மேலும், எதையும் எதிர்கொள்ளும் வகையில், மருத்துவர்கள்  தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

;