districts

கோடைகாலத்தில் கால்நடை பராமரிப்பு கூடுதல் கவனம் தேவை: ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை, ஏப்.26- காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பம் மற்றும்  மழையின்மையால் மயிலாடு துறை மாவட்டத்தில் கால்நடை களுக்கு வெப்ப அயற்சி, சோர்வு,  நீரிழப்பு போன்ற அசௌகரி யங்களை ஏற்படுத்தும். குறிப் பாக கடலோரப் பகுதிகளில் அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் இருப்பதால் கால்நடை  பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வெப்ப அயற்சியினால் கால் நடைகளுக்கு, நிழலைத் தேடி  செல்லுதல். அதிகமான தண்ணீர்  குடித்தல், பசியின்மை, அதிக மாக உமிழ் நீர் வடித்தல், வேகமாக மூச்சு விடுதல், வாய்  திறந்த நிலையில் சுவாசித்தல், உடல் வெப்பம் அதிகரித்து காணப் படுதல், வெப்பத்தினால் நீரிழப்பு ஏற்பட்டு நடுக்கத்துடன் கூடிய சாய்நிலைக்கு செல்லுதல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். அதிக வெப்பத்தினால் பாதிப் படையாமல் இருக்க காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணிக் குள்ளும் மேய்ச்சலை முடித்துக்  கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மாடுகளுக்கு 30 முதல் 50 லிட்டர் வரையும், ஆடுகளுக்கு 10 முதல் 12 லிட்டர் வரையும் குடி நீர் அளிக்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்கும் வகையில் கொட்டகை மற்றும் மேய்ச்சல் இடங்களில் தண்ணீர் தொட்டி வைத்தல் வேண்டும். குடிநீரில் உப்பு, தீவனம், புண் ணாக்கு போன்றவை கலந்து வைப்பதனால் கால்நடைகள் தண்ணீர் பருகுவது அதிகரிக்கும். கொட்டகையினுள் நீர் தெளிப் பான் உதவியுடன் குளிர்ந்த நீரை  மாடுகள் மேல் தெளிப்பது, மின் விசிறி அளிப்பது, கொட்டகை யின் மேல் பரப்பில் வைக்கோல்  அல்லது தென்னங்கீற்றை பரப்பி அதன்மேல் நீர் தெளித்தல், கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் நடுவதன் மூலம் கொட்டகையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். எருமை  மற்றும் பன்றிகளுக்கு குளியல்  தொட்டிகளை உருவாக்கி வெயில் நேரத்தில் அத்தொட்டி யில் விடுதல். கோடைகாலங்களில் கால்ந டைகளுக்கு, காலை 9 மணிக்குள் ளும் மற்றும் மாலை 5 மணிக்கு மேலும் சினை ஊசி போட்டுக் கொள்ளலாம். மேலும் தாது உப்புக் கலவையினை மாடு களுக்கு ஒரு நாளைக்கு 30-50  கிராம், ஆடுகளுக்கு 10-15கிராம்  என்ற அளவிலும் தண்ணீரில் கலந்து வைக்கவும். கோடையில் நோய் எதிர்ப்பு  சக்தி குறைவதனால் அம்மை,  அடைப்பான், கோமாரி, ஆட்டுக் கொல்லி மற்றும் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் போன்ற  நோய்கள் ஏற்பட வாய்ப்பு  உண்டு. எனவே, கால்நடை களுக்கு தகுந்த நேரத்தில் அரசின்  மூலம் இலவசமாக செலுத்தப் படும் தடுப்பூசிகளை கால்நடை  மருத்துவர்கள் ஆலோசனைப் படி செலுத்தல் வேண்டும். கோழிகளுக்கு உச்சி வெயில்  நேரத்தில் தீவனம் அளிக்கக் கூடாது. இரவிலும், விடியற் காலைப் பொழுதிலும் தீவனம் அளிக்க வேண்டும். கோடையில்  கோழிகளுக்கு வழக்கத்தைவிட அதிகமான இடவசதி அளிக்க வேண்டும். அதாவது வழக்கத்தை  விட 20 சதவீதம் குறைவான எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க வேண்டும். குடிநீரில் வைட்டமின் சி மருந் தினை தலா ஒரு கோழிக்கு 10  மில்லி கிராம் வீதம் கலந்து கொடுத்தல் அயர்ச்சி நீக்கும். பி- காம்ப்ளக்ஸ் வைட்டமின், குளுக் கோஸ் போன்றவை கலந்து  கொடுக்கலாம் என மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

;