districts

img

அழகு கையெழுத்துப் போட்டி: வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசு

தஞ்சாவூர், ஏப்.26 -  ‘தமிழ்வெற்றி டாட் காம்’ இணைய தளம் நடத்திய அழகு கையெழுத்துப் போட்டியில், வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.  டெலிகிராம் குழுவின் மூலமாக www.tamilvetri.com இணையதளம், மாண வர்களுக்கான அழகு கையெழுத்துப் போட்டியை அறிவித்தது. மாணவர்களின்  கையெழுத்து திறனை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட அழகு கையெழுத் துப் போட்டியில், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இதில், முதல் வகுப்பு த.அனுஹா ஷினி, 2 ஆம் வகுப்பு வை.ஹரிகரன், நீ. லோகிதா, வி.ஐனிக் பிரேமா, வெ.மகிழினி,  3 ஆம் வகுப்பு கா.ஜுவைரியா, ம.பாவ னாஸ்ரீ, 4 ஆம் வகுப்பு த.தர்ஷினி, ச.மது வர்ஷா, நீ.ஹரிபூரணி, 5 ஆம் வகுப்பு க.பூவிகா, சோ.குபேரன், நிரஞ்சனா, ரோஷன், ம.ஆதவன் ஆகிய 15 பேர் சிறந்த அழகு கையெழுத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் www.tamilvetri.com இணையதளத்திலிருந்து எவர்சில்வர்  தட்டு, பேனா உள்ளிட்ட பரிசுகள் அனுப்பப் பட்டு, பள்ளியில் மாணவர்களிடம் வழங்கப் பட்டது.  போட்டியில் கலந்து கொள்ள மாண வர்களை ஊக்கப்படுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ராதேவி, உதவி  ஆசிரியர்கள் ஹாஜாமொய்தீன், ரேணுகா  ஆகியோருக்கும், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், தகுதிப்ப டுத்திய பெற்றோர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ஜசீரா  ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

;