districts

img

அவிநாசி: ஆட்டோ தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கு: இந்து முன்னணி பிரமுகர் கைது

அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் ஆட்டோ தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இந்து முன்னணி பிரமுகர் அழகுபாண்டியனை புதனன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவிநாசி அருகே ஆட்டையம்பாளையத்தில் கடந்த ஞாயிறன்று ஆட்டோ நிறுத்துவது,  கொடிக்கம்பம் நடுவது சம்பந்தமாக பிரச்சனை எழுந்ததை  தொடர்ந்து  இந்து முன்னணி பிரமுகர் அழகுபாண்டி மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கந்தசாமி மற்றும் தரணிஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆட்டோ தொழிலாளிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இந்து முன்னணி பிரமுகர் ஸ்ரீதர், அழகுபாண்டி அவருடைய நண்பர் ஆகியோரை கைது செய்யக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து இந்து முன்னணி பிரமுகர் அழகுபாண்டி அவருடைய நண்பர் ஆகியோர் மீது மட்டும் அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது அழகுபாண்டியனை மட்டும் அவிநாசி காவல்துறையினர் புதனன்று கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு குற்றவாளியான அழகுபாண்டியின் நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

;