districts

img

துப்புரவு பணியாளர் பாலியல் வன்கொலை கொலையாளிகளை கைது செய்யக்கோரி பழனியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

பழனி, ஜூன் 24- பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் துப்புரவு பணியாளர் அன்  னம்மாள் என்பவரை பாலியல் வன் கொலை செய்தவர்களை கைது செய் யக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஜூன் 24 அன்று பழனி வட்டாட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்க மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். சிஐ டியு கன்வீனர் கே பிச்சைமுத்து,பேரா. சுந்தரவள்ளி , பஞ்சாலை சங்க மாவட்ட  தலைவர் ஈஸ்வரன், கட்டுமான சங்க  தாலுகா செயலாளர் பெரியசாமி,சிபிஎம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகி யோர் பேசினர்.

;