election-2019

img

தோழர் கூ.ராஜூ காலமானார் குடிநீர் வடிகால் வாரியத்தின் சிஐடியு ஊழியர்

மன்னார்குடி, ஏப்.6-

குடிநீர் வடிகால் வாரியத்தின் சிஐடியு ஊழியர் மற்றும் ஓய்வு பெற்ற பணி ஆய்வாளரும் சிபிஎம் நகர கட்சிஉறுப்பினருமான கூ.ராஜூவெள்ளியன்று மன்னார்குடியில் காலமானார். அவருக்கு வயது 85. நீண்ட காலமாக உடல் நலமின்றி இருந்த அவர், அந்தோணியார் கோவில் தெருவில் உள்ள அவரதுஇல்லத்தில் மரணமடைந் தார். கூ.ராஜூவின் மகள்ஜெயந்தி மருமகன் வெங்கடேசன் இருவரும் கட்சி உறுப்பினர்களாவார்கள். தோழர் கூ.ராஜூவின் இறுதி நிகழ்ச்சி சனியன்று மன்னார்குடியில் நடைபெற்றது. சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், நகரக்குழு உறுப்பினர்கள் எம்.சிராஜூதீன், கே.அகோரம், கே.மகாதேவன், பி.கலைச் செல்வி, கிளைச் செயலாளர் கலைச்செல்வி, சிஐடியு தனுஷ்கோடி உள்ளிட்டோர் மறைந்த தோழர் கூ.ராஜூவின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினர்.

;