election-2019

img

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்

திருச்சிராப்பள்ளி, ஏப்,6-

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவரை, ஆதரித்து துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிலியாபுரம் ஒன்றியம் எரகுடி மாரியம்மன் கோவில் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சங்கர் தலைமை வகித்தார். பிரச்சாரத்தில் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பழநிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்தன், உப்பிலியாபுரம் ஒன்றிய செயலாளர் டி.முத்துக்குமார், திமுக மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், எரகுடி செயலாளர் அசோக், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி நேரு ஆகியோர் பேசினர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர்கள்பொன்னுச்சாமி, நடராஜன், ரவி, பாக்கியராஜ், எஸ்.பாலசுப்ரமணியன், ஜி.முத்துக்குமார் ஏ.கணேசன் மற்றும் ஹரிபாஸ்கர், மருதை, வடமலை, வீரமலை, விஸ்வநாதன், திமுக செயலாளர் ஆசிரியர் வைத்தியலிங்கம், மதிமுக மாவட்ட பிரதிநிதி அருணாராஜன் உள்பட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;