games

img

ஈட்டி எரிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற நாளை தேசிய ஈட்டி எறிதல் நாளாக இந்தியத் தடகள சம்மேளனம் அறிவிப்பு

புதுடெல்லி : டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எரிதலில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா. அவருக்கு இந்தியத் தடகள சம்மேளனம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அந்த பாராட்டு விழாவில் , தடகள சம்மேளனத்தின் திட்ட கமிட்டி சேர்மன் லலித் பனோட் , நீரஜ் சோப்ரா ஈட்டி எரிதலில் தங்கம் வென்ற ஆகஸ்ட்- 7 ம் தேதியை , தேசிய ஈட்டி எறிதல் நாளாக அறிவித்திருக்கிறார். நீரஜ் சோப்ராவின் இந்த சாதனை நாடு முழுவதும் உள்ள பலரை ஊக்கப்படுத்தும் என்றும் கூறினார். ஒவ்வொரு மாநில தடகள சங்கங்களையும் , ஈட்டி எறிதல் போட்டியை நடத்த அறிவுறுத்தியுள்ளதாகவும் , மாவட்டங்களுக்கு இடையே போட்டிகளை நடத்தப்போவதாகவும் கூறினார் . மேலும் , ஈட்டி எறிதல் போட்டியைத் தேசிய அளவில் விரிவாக்கம் செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

;