india

img

ஒரே நாளில் கொரோனாவால் 44 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 


   இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்ட தொற்றான 9,355 விடக் குறைவாகும் ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாகும். நேற்று 26 ஆக இருந்த நிலையில் இன்று கொரோனாவல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. 
 சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 53,852 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10,780 பேர் குணமடைந்துள்ளனர் 
 

;