science

img

இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல் 1

சென்னை,ஜன.5- சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப் பட்ட ஆதித்யா எல் 1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்ப தாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகர மாக ஏவப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லேக் ராஞ்சியம் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறு த்தப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, ஆதித்யா எல் 1 விண்கலம் அதன் எல் 1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆதித்யா எல்1 அதன் முக்கியமான செயலை சனிக்கிழமை (ஜன. 6) மேற்கொள்ள இருக்கிறது. சுற்றுப்பாதை சூழ்ச்சி தொடர்பான செயலை இஸ்ரோ இதுவரையில் செய்த தில்லை. எல் 1 புள்ளியில் செயற்கைக் கோள் நிலை நிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த புள்ளிக்கு சென்றால் மட்டுமே ஆதித்யா சூரியனை தடையின்றி பார்க்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

;