science

img

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு மகுடம் சேர்த்த இஸ்ரோவின் சாதனை

விஞ்ஞானி  த.வி.வெங்கடேஸ்வரன் பெருமிதம்

சென்னை, ஜன. 5- புவியீர்ப்பு விசை இல்லாத விண் வெளியில் நீர் மற்றும் மின்சா ரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ள இஸ்ரோ, விஞ்ஞானி களின் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி  வைத்துள்ளது என்று விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பெரு மிதத்துடன் கூறியுள்ளார். விண்ணில் மின்சாரம் உற்பத்தி  செய்து சாதனை படைத்துள்ளது இஸ்ரோ. இதுகுறித்து விஞ்ஞானி யும் முதுநிலை அறிவியலாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் (விஞ் ஞானி பிரச்சார், தில்லி) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  ஜனவரி 1ஆம் தேதி பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் விண்ணில் செலுத்தப் பட்டது. இதன் முக்கிய நோக்கம் விண்வெளியில் உள்ள கருந்துளை கள் முதலியவற்றை வெளியிடும் எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் ஆராய்ச்சி செய்யும் எக்போ சாட்டை விண்வெ ளியில் நிலை நிறுத்துவதுதான். பிஎஸ்எல்வி-சி58 பூமியிலிருந்து சுமார் 650 கி.மீ. உயரத்தில் எக்போ  சாட்டை விண்வெளியில் நிலை நிறுத்திய பின்னர், ராக்கெட்டின் மூன் றாவது கட்ட ஏவூர்தி பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ. தாழ்வட்ட பாதைக்கு கொண்டு வரப்பட்டது. பொதுவாக 3ஆவது கட்ட ஏவூர்தி  தன் பணியை முடித்த பின்னர் குப்பை  போல விண்வெளியை சுற்றி வரும். ஆனால் அந்த மூன்றாம் கட்ட ஏவூர்தி யை ஆய்வு தளமாக பயன்படுத்த இஸ்ரோ முயற்சி செய்தது. இதன் தொடர்ச்சியாக விண்வெளியில் எரி பொருள் ஆராய்ச்சி என பல்வேறு ஆய்வுகளை எடுத்துச்சென்றது. அதில் ஒன்று பாலிமர் எலக்ட் ரோலைட் செல் சவ்வு (polymer electrolyte membrance fuel cell). இந்த கலத்தின் ஒரு புறம் ஹைட்ரஜனும், மற்றொரு புறம் ஆக்சிஜன் வாயுவும் நிரப்பப்பட்டு, இதன் நடுவில் ஒரு ஜவ்வு ஒன்று இருக்கும்.

விண்வெளியில் ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்சிஜன் வாயுவை யும் ஜவ்வு வழியாக இணைக்கும் பொழுது, அதிலிருந்து கழிவாக சுத்தமான நீர் உருவாகும். மேலும், இந்த ஜவ்வு வழியாக ஹைட்ரஜன் செல்லும் பொழுது மின்சுற்று உரு வாகி அதிலிருந்து மின்சாரம் உரு வாகும். ஆக ஹைட்ரஜன் ஆக்சி ஜனைக் கொண்டு தண்ணீரையும், வெப்பத்தையும் சுலபமாக விண் வெளியில் நாம் பெறமுடியும் என்று இஸ்ரோ தனது சோதனையில் வெற்றித் தரவுகளை பதிவு செய்துள்ளது. இந்த மின்கலம் விண்வெளியில் எப்படி வேலை செய்யும் என்பதை இந்த ஆய்வு மூலம் இஸ்ரோ சோதனை செய்து பார்த்துள்ளது.  புவியீர்ப்பு விசை தாக்கம் அற்ற நிலையில் விண்வெளியில் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் இணைக்க இயலுமா? இது சாத்தி யமா என்ற விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல, இஸ்ரோ  விஞ்ஞா னிகளின் சோதனை நமக்கு வெற்றி யை தந்துள்ளது. இந்த சோதனை யில் 180 வாட் மின்சாரம் கிடைத்த தாக இஸ்ரோ தகவல் வெளி யிட்டுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருளையும், மின்சாரத்தையும் விண்வெளியில் பெறமுடியும் என்ற ஒரு அசாத்திய நிகழ்வை இஸ்ரோ செய்துள்ளது. மேலும், நிலவில் இருக்கும் பனிக்கட்டியிலிருந்து ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் பிரித்து, எரிபொருளாக பயன் படுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விஞ்ஞானி தெரி வித்துள்ளார்.

;