states

img

வலையில் சுற்றும் பொய்கள்

‘தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் கோவில்களுக்கும் குடி மக்களுக்கும் மின்சாரம் ஒரு யூனிட் ரூ7.85; மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் 1.85” என சங்கிகள் பொய்ச் செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பரப்பப்பட்ட இந்த வதந்தி மீண்டும் சுற்றுக்கு விடப்படுகிறது. 
உண்மை என்ன?

•    குடி மக்களுக்கு 100 யூனிட் வரை இலவசம்!101 முதல் 200 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.05 (உயர்த்தப்பட்ட ரூ.55 உட்பட)
•    அறநிலையத்துறை கீழ் உள்ள கோவில்கள்/ மசூதிகள்/தேவாலயங்கள் அனைத்துக்கும் 120 யூனிட்  வரை யூனிட்டுக்கு ரூ 2.85. அதற்கு மேல் யூனிட்டுக்குரூ.5.75.
•    அறநிலையத்துறை கீழ் இல்லாத கோவில்கள் மற்றும் மசூதிகள், தேவாலயங்கள் உட்பட வணிக பயன்பாட்டின் கீழ் மின் இணைப்பு பெற்றிருந்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ 8.05.   எனவே மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மட்டும் சலுகை மின் கட்டணம் என்பது சங்கிகள் பரப்பும் பொய்யே. 

தி.மு.க. தலைவர் கலைஞர் உடல் நிலை சரியில்லாமல் இருந்த பொழுது கனிமொழி அவர்கள், தனது தந்தையை எந்த ஆன்மீக வாதியும் வந்து பார்க்க வேண்டாம் எனவும் அர்ஜுன் சம்பத் கொடுத்த விபூதியை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டேன் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக இப்பொழுது செய்தி பரப்பப்படுகிறது. ஆன்மீகத்தையும் விபூதியையும் இழிவுபடுத்தியவர்களை மறக்க வேன்டாம்! மன்னிக்க வேண்டாம்! அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் செய்தி பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?
இது முற்றிலும் எடிட் செய்யப்பட்ட போலியான பதிவு. இத்தகைய பதிவு எதையும் தான் போடவில்லை என கனிமொழியும் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் காவிக் கூட்டம் இந்த பொய்யை பரப்பி வருகின்றது. 

;