tamilnadu

img

அமைச்சர் சீனிவாசன் கைது கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், பிப். 7- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை ரயிலடியில் வெள்ளி யன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், மாநில துணைப் பொதுச் செயலாளர்  கந்த சாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னார். இந்நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ஜெயபால், டி.கோவிந்தராஜ், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டத்தலைவர் சே.செல்வராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ந.சிவகுரு, இரா. புண்ணியமூர்த்தி, ப.சத்தியநாதன், களப்பிரன், பி.எம்.இளங்கோவன், வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் அருளரசன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி கோதன பாணி, மாதர்சங்க மாவட்டத்தலைவர் கலைச்செல்வி, மாலதி, என்.குரு சாமி, சரவணன், அன்பு, இராஜா, இராம சாமி, கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;