tamilnadu

img

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் விரிவுபடுத்தப்படும்... ஓசூர் தொடக்க விழாவில் முதலமைச்சர் அறிவிப்பு....

 ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற உன்னதமான திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். 

நாட்டிலேயே முதன்முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் தமிழ்நாட்டில் கோவை, மதுரை,நெல்லை, சென்னை, கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டத்தில்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் தொடக்கி வைத்துள்ளார். இதன்மூலம்  நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், டயாலிசிஸ்போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமை யிலுள்ள நபர்களை கண்டறிந்து உடல் பரிசோதனை செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்

மேலும் இந்தத் திட்டம்  இந்த ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதல் கட்டமாக ரூ.242 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.இந்த விழாவில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி,சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், தளி எம்எல்ஏ ராமச்சந்தி ரன், முன்னாள் எம்எல்ஏக்கள் முருகன், சத்யா, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;