tamilnadu

img

கே.ஆர்.கவுரியம்மாவுக்கு வி.எஸ்.அச்சுதானந்தன் நேரில் வாழ்த்து

ஆலப்புழா, ஜுலை 8 - நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில் சனியன்று கே.ஆர்.கவுரியம்மா வீட்டுக்கு நேரில் வந்து வி.எஸ்.அச்சுதானந்தன் வாழ்த்து தெரிவித்தார். கேரளத்தின் வீரமங்கை முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கே.ஆர்.கவுரியம்மாவின் பிறந்தநாளன்று உடல்நலக்குறைவு காரணமாக வாழ்த்து கூற நேரில்வர இயலாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் சனியன்று (ஜுலை 6) நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். “இப்போது வந்தால் பிறந்தநாள் விருந்து சாப்பிட முடியுமா” என கேட்டு,  கவுரியம்மா கொடுத்த இனிப்பை வழக்கத்துக்கு மாறாக அச்சுதானந்தன் சாப்பிட்டார். மீண்டும் கவுரியம்மா கேட்டார், “வயதில் மூத்தவர் நானா அச்சுதானந்தனா” என்று. அதற்கு பதிலளித்த அச்சுதானந்தன் “கவுரியம்மாவுக்கு வயது கூடிக்கொண்டிருக்கிறது. எனக்கோ வயது குறைந்து கொண்டிருக்கிறது” என்று கூறியபோது அந்த இடமே சிரிப்பலையால் நிறைந்தது.  குட்டநாட்டில் நடந்த கருத்தரங்கத்தில் பங்கேற்க வந்த வி.எஸ். அச்சுதானந்தன், தன்னை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கவுரியம்மா கூறினார்.

;