tamilnadu

img

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொலை

கோவை துடியலூர் அருகே பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின்  வீட்டிற்கு செவ்வாயன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி தலைமையில் சென்ற இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இளைய மகளின் கல்விச் செலவினை இன்சூரஸ் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்டச் சங்கம் ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்து முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை வழங்கினர். இதில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் துளசிதரன், சுரேஷ், கிரிஜா, உமாமகேஷ்வரி, சுதா மற்றும் மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பங்கஜவல்லி, சுதா ராமர், விஜயலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;