tamilnadu

img

வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணியை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை மனு

வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணியை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட செய லாளர் எஸ்.தயாநிதி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். வேலூர் நகரில் இரண்டு மூன்று இடங்களில் காய்கறி கடைகளை திறக்க வேண்டும் என்றும் நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்றும் சிஎம்சி மருத்துவமனைக்கு வெளி ஊர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் வருகை தந்த  நோயாளிகள் உதவியாளர்கள் தங்குவதற்கு போதுமான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் நீரழிவு நோயாளி களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினார். இந்தசந்திப்பின் போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் கபில் நிலோபர்  சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

;