tamilnadu

img

ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் உள்ள காட்டன் மில்லில் 43 பேருக்கு கொரோனா...   

சிவகாசி 
தென் தமிழ்நாடு பகுதியின் கொரோனா மையமாக விருதுநகரில் இன்னும் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வரவில்லை. தினமும் 300-க்கும் மேற்பட்டோர் புதிதாக மருத்துவமனைக்கு செல்வதால் அம்மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய நகரான ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் காட்டன் மில்லில் 43 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.  

;