tamilnadu

img

ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை:
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதனன்று (ஜூன் 24) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.தமிழ்நாட்டில் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றால் 2,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 62,087 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பிற மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் புதன்கிழமை காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த ஆலோசனையில் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

;