tamilnadu

img

தனியார் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் எடுப்போர் பட்டியலை எடுக்கிறது சென்னை மாநகராட்சி....

சென்னை:
தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள்மற்றும் கிளினிக் வைத்துள்ள மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கொரோனா தொற்றுஅறிகுறி உள்ள நபர்கள் குறித்த தகவலை மாநகராட்சிக்கு அளிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்கேன் மையங்களில் சிடி ஸ்கேன் எடுப்பவர்களின் பட்டியலையும் சென்னை மாநகராட்சிகேட்டுள்ளது.

அதன்படி வியாழனன்று 402 தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களிலிருந்து காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா தொற்றுஅறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 659 நபர்களின் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த 659 நபர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சிடி ஸ்கேன் மையங்களில் தொற்றுஅறிகுறி உள்ள நபர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளாமல் நேரடியாக மார்பக ஸ்கேன் எடுப்பதாகத் தகவல்கள் பெறப்படுகின்றன.

;