tamilnadu

img

பழம், மலர், நாட்டு மருந்துக்கடை திறக்க அனுமதி... முதலமைச்சருக்கு விக்கிரமராஜா நன்றி....

சென்னை:
பழம், மலர்,நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமைச்சராக பதவி ஏற்ற 2 ஆம் நாளிலேயே, வணிகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, தீர்க்கமான தீர்வுகள் காண விடுமுறை தினம் என்றும் பாராமல், அதிகாரிகளையும் அழைத்து, கலந்தாய்வு செய்து, வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முனைந்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.எங்கள் கோரிக்கையினை ஏற்று பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

;