tamilnadu

தமிழக அரசின் குறுகிய புத்தி

 சென்னை,டிச.22- சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தொழி லாளர்கள் திங்கள்கிழமை விடுப்பு எடுக்கத் தடை விதித்தும், அன்றைய தினத்தின் வார விடுமுறை யை ரத்து செய்தும் மேலாண்மை இயக்குநர் ஞாயிற்றுக்கிழமை சுற்ற றிக்கை அனுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் திங்கள்கிழமை (டிச.23) திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் போக்கு வரத்துக் கழத்தின் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பா ர்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள சுற்ற றிக்கையில், போக்கு வரத்துக் கழக தொழிலாள ர்கள் அனைவரும் திங்கள்கிழமை கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வார விடுமுறை உள்பட அனைத்து விடுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

;