tamilnadu

img

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடக்கு உள்மாவட்டங்களான தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், நாளை முதல் அனல் காற்று சற்று குறைய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செண்டி மீட்டர், தேனி மாவட்டம் மஞ்சளாறில் 4 செண்டி மீட்டர், ராசிபுரத்தில் 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்சமாக 39 டிகிரியும், குறைந்தபட்சமாக 30 டிகிரியும், வெப்ப நிலை பதிவாகி உள்ளது.


;