tamilnadu

img

அதிராம்பட்டினம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், ஏப்.1-

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறையில் கல்வி பயின்றமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ.அபுல் ஹசன் தலைமை வகித்து உரை ஆற்றினார். முன்னிலை வகித்த கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் சிறப்புரையாற்றினார்.கணினி அறிவியல் துறைத் தலைவர் என்.ஜெயவீரன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் எம்.முகமது முகைதீன், எம்.நாசர், பேராசிரியர்கள் ஜெ. சொக்கலிங்கம், எஸ்.பி.கணபதி, ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியை பேராசிரியைகள் ஏ.சித்தி ஜாபிரா, எஸ்.சுபாதேவி ஆகியோர் தொகுத்துவழங்கினார். பேராசிரியர் ஏ.ஷேக் அப்துல் காதர் நன்றிகூறினார்.

;