tamilnadu

ஓஹெச்டி, துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தின் குடவாசல் ஒன்றிய மாநாடு

குடவாசல், மே 22-திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் மேல்நிலை நீர்த்தொட்டி பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பாக (சிஐடியு இணைப்பு) குடவாசலில் உள்ள எம்.எஸ்.கே.திருமண மண்டபத்தில் ஒன்றிய மாநாடு நடைபெற்றது.மாநாட்டுக்கு மாவட்ட கவுரவத் தலைவர் டி.கலியமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர்கள் ஜி.பக்கிரிசாமி, கே.காத்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் கே.ஆறுமுகம் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், உள்ளாட்சி துறை சங்க மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பி.டி.லோகநாயகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாநில தலைவர் நா.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்ப ட்டனர். குடவாசல் தெற்கு பகுதி தலைவராக எஸ்.ஜெயராஜ், செயலாளராக கே.ஆறுமுகம் பொருளாளராக எம்.புஷ்பாமோகன், குடவாசல் வடக்குப் பகுதி தலைவராக டி.கலியமூர்த்தி, செயலாளராக கே.காத்தலிங்கம், பொருளாளராக ஏ.திலகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;