tamilnadu

img

திருச்சி- பெங்களூரு விமான சேவையில் மாற்றம்

திருச்சி,அக்.20- திருச்சி- பெங்களூரு இடையே விமான சேவை வருகிற 27 ஆம் தேதி முதல் மாலை நேர சேவையாக மாற்றப்படுகிறது. இதேபோல் நவம்பர் 15 ஆம் தேதி முதல் காலையிலும் விமான சேவை தொடர உள்ளது.  கொச்சியிலிருந்து திருச்சி வழியாக பெங்களூ ருக்கு காலை நேரத்தில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த விமான சேவை தினமும் காலை 7.30 மணிக்கு கொச்சியிலிருந்து திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து 8 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் நோக்கிச் செல்லும். 

பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.30 மணிக்கு திருச்சி வந்து 11 மணிக்கு திருச்சியிலிருந்து கொச்சிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவையானது தொழில்நுட்ப காரணங்க ளால் கொச்சியிலிருந்து இயக்க முடியாமல் திருச்சியி லிருந்து இயக்கப்படும் நிலை உருவாகி தற்போது இயக்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த விமான சேவையானது வருகிற 27 ஆம் தேதி முதல் மாலை நேர சேவையாக மாற்றப்பட்டு பெங்களூருவிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 6.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். மீண்டும் திருச்சியிலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு 8.50 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விமானத்தில் 74 பயணி கள் அமரக்கூடிய இருக்கை களை கொண்டதாகும். மேலும் திருச்சிக்கு காலை நேர சேவையாக இண்டிகோ விமானம் தனது சேவையை நவம்பர் 16 ஆம் தேதி முதல் வழங்க உள்ள தாக அறிவிப்பு வெளியிட்டு ள்ளது. இந்த அறிவிப்பில் பெங்களூருவில் இருந்து காலை 6-50 மணிக்கு புறப்படும் இந்த விமானம் காலை 8- 15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்த டையும். மீண்டும் இந்த விமானம் காலை 9-15 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு 10-40 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. மேலும் இண்டிகோ நிறுவன த்தின் சார்பில் மீண்டும் மும்பை மற்றும் புது டெல்லிக்கு விமானம் இயக்கப்படுவதற்கான ஆய்வுப்பணிகள் நடை பெற்று வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

;