tamilnadu

img

கிணறு தோண்டும் பணியில் கயிறு அறுந்து 6 பேர் பலி

திருவண்ணாமலை, ஏப்.19- திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அருகே உள்ள, ஆலத்தூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் கிணறு தோண்டிய போது, கயிறு அறுந்து விழுந்து 6 பேர் பலியாகினர். கிணறு தோண்டும் பணியில், தாமரைப்பாக்கம் அன்னந்தல் பகுதியை சேர்ந்த, வேலு, தணிகாசலம், பிச்சான்டி, ரவிசந்திரன், ஜெயமுருகன், ஆகிய 5 கூலித்தொழிலாளிகள் ரோப் காயிறு அறுந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவரும் உயிரிழந்தார். விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுக்கா காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

;