tamilnadu

அவதூறு செய்திகளை நம்ப வேண்டாம்  இந்திய மருத்துவக் கழகம் தகவல்

மன்னார்குடி, ஜூன் 15- இந்திய மருத்துவ கழக நீடாமங்கலம்- மன்னார்குடி பகுதிச் செயலாளர் டாக்டர் ராஜ்குமார் கூறியதாவது: இந்திய மருத்துவ கழக நீடாமங்கலம், மன்னார்குடி கிளை மூத்த டாக்டர் கருணா கரனை பற்றியும், அவர் நடத்தி வரும் மருத்துவமனை பற்றியும், மருத்துவருக்கு நோய் தொற்று என்றும், மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளார்கள் என்றும் உண்மைக்கு புறம்பாக அவ தூறாக பேசி தவறான செய்தி களை சில விஷமிகள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். இது போன்று வதந்திகள் பரப்புவர் மீது சட்டப்படி காவல்துறை மூலம் நடவ டிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் இது போன்ற வதந்தி களை நம்ப வேண்டாம் என்றார். இந்திய மருத்துவ கழக நீடாமங்கலம்- மன்னார் குடி பகுதி தலைவர் டாக்டர் அசோக்குமார், பொருளாளர் டாக்டர் மதுசூதனன் ஆகி யோர் உடனிருந்தனர். 

;