tamilnadu

டெல்டா மாவட்டங்களில் நடந்த தூர்வாரும் பணி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

தரங்கம்பாடி, ஜூன் 29-  டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற தூர்வாரும் பணி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும் என தமிழ்நாடு  விவசாயிகள் சங்கம் கோரி க்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு  விவசாயிகள் சங்க நாகை  மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ்  செய்தியாளர்க ளிடம் கூறுகையில், இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது டெல்டா மாவட்ட விவசாயிகளின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப டுத்தினாலும்,  14 நாட்களைக் கடந்தும் வீரசோழன் ஆறு,  திருமலைராஜன் ஆறு  (திருமருகல்), சந்திரநதி யாறு போன்ற கடைமடை பகு திகளுக்கு இன்றுவரை தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை.  தற்போது திறந்து விடப்பட்டிருக்கும் 10 ஆயி ரம் கனஅடி தண்ணீர் ‘ஏ  சேனல்’ ஆறுகளை ஈரப்ப டுத்திச் செல்ல மட்டுமே  போதுமானது.

வாய்க்கா ல்கள் வரை அனைத்து நீர்நி லைகளுக்கும் தண்ணீர்  சென்று சேர வேண்டுமெ னில் காவிரி ஆற்றில் திறக்க ப்பட்டுள்ள நீரின் அளவு 15  ஆயிரம் கனஅடியாக அதி கரிக்கப்பட வேண்டும். தரங்கம்பாடி அருகே அரும்பாக்கத்தில் வீர சோழனாற்றில் அண்மையில் கட்டப்பட்ட கரை பாதுகாப்பு சுவர் இடிந்துள்ளது. சங்கரன்பந்தலில் நடை பெற்ற சட்ரஸ் அமைக்கும் பணியும் முழுமையாக பூர்த்தி அடையவில்லை. தமிழக அரசு திட்டமிட்டே தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணிகளுக்கு தண்ணீர் திறப்பதற்கு 20 நாள்களுக்கு முன்பு நிதி ஒதுக்கியுள்ளது.  இதனால், அரசு ஒதுக்கிய  ரூ.500 கோடி பணம் தண்ணீ ரோடு போய்விட்டது. தமிழக அரசு டெல்டா மாவட்டங்க ளில் நடைபெற்ற தூர்வாரும் பணி தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இதுவரை எவ்வளவு சதவீத பணிகள் பாக்கியுள்ளது என்பதை கணக்கிட்டு வேலை செய்யப்படாத பணிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை அரசு வழங்கக் கூடாது என்றார். இச்சந்திப்பின் போது மாவட்டப் பொருளாளர் இரா சையன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

;