tamilnadu

அரசுப் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு மீட்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை,ஜூலை 16 - நீலகிரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி யின் நிலத்தை மீட்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, நெலாக்கோட்டை பஞ்சாயத்துக்குட்பட்ட விலங்கூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.இப்பள்ளி கடந்த 50ஆண்டுக ளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த  பள்ளிக்கு சொந்தமான நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ள னர்.

இதனால் இந்த பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதி காரிகள் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;